மும்பை அருகே சரக்கு லாரி- ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் உடல் நசுங்கி பலி
மும்பை: மஹாராஷ்டிராவில் சரக்கு லாரியும்,ஜீப்பும் மோதிக் கொண்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கோண்டியா நகரத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநில நெடுஞ்சாலையில் நாக்ரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் அருகே இன்று (செப்.8) நண்பகல் 12.30 மணியளவில் சரக்கு லாரியும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. விபத்தில் ஜீப்பில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தை அறிந்த ஊர்மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணிகளில் இறங்கினர். விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்களை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

