நாடெங்கும் மந்தமாகும் வீடு விற்பனை - என்ன காரணம்? விளக்கும் ரியல் எஸ்டேட் நிபுணர்கள்
உயரும் கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் வீடுகளின் விலைகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகின்றனர். இது எவ்வளவு தீவிரமடைந்துள்ளது?
இந்தியாவில் இன்றும் பெரும்பாலான மக்களுக்கு சொந்த வீடு வாங்குவது ஒரு கனவாகவும், வாழ்க்கையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
அதே வேளையில், வீடு வாங்குவது ஒரு பெரிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்திய போக்குகள் ஆமதாபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் வீட்டு விற்பனையின் வேகம் குறைந்திருப்பதைக் காட்டுகின்றன.
பிடிஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 28 முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் முன்பதிவு மதிப்பு, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 21% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 50,900 கோடியாக இருந்த முன்பதிவு மதிப்பு, இந்த ஆண்டு சுமார் ரூ.40,000 கோடியாகக் குறைந்துள்ளது.
