பிரிக்ஸ் பிரகடனத்தில் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் கண்டனம்
புதுடில்லி: பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் கண்டிப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் பிரிக்ஸ் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருமனதாக ஏற்றன.
இந்தியா தலைமையில் நடந்த 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 2026ம் ஆண்டுக்கான டில்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சர்வதேச அமைப்புகளான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட நிர்வாகத்தில் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டது.


