குன்னூர் பெண் விஞ்ஞானிக்கு உலக அங்கீகாரம்!
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த இளம் இயற்பியல் விஞ்ஞானி முனைவர் அனுரோஷினி ராமகிருஷ்ணன், ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க 'அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்' ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆராய்ச்சியாளர்களின் அறிவியல் சாதனைகள், கல்விசார் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இது மிக உயர்ந்த கல்வித் தகுதிக்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஹம்போல்ட் நெட்வொர்க்கில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, இந்த அங்கீகாரத்தின் சிறப்புகளை அறியலாம்.
இதுகுறித்து அனுரோஷினி ராமகிருஷ்ணன் கூறியது: