கற்பித்தலில் மாற்றம் தேவை
'மாணவர்களிடம் அனைத்து ஞானமும் உள்ளது. அதை வெளியே கொண்டு வரும் வழிகாட்டிதான் ஆசிரியர். உண்மையான கற்பித்தல் என்பது வெறும் வார்த்தைகளை விடுவதோ, கொள்கைகளைத் திணிப்பதோ அல்ல; அறிவைப் பகிர்வதும், ஆன்மாவைத் தொடுவதுமாகும். கல்வியின் நோக்கம் வாழ்க்கையை, மனிதனை, குணநலன்களை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும்' என்கிறார், சுவாமி விவேகானந்தர்.
காலத்துக்கு ஏற்ப மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் கற்றலை ஆசிரியர்கள் கையாள வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சி அவசியம். ஆசிரியர் மேம்பாட்டுத் துறையில் கால்பதித்து, அதை உலகளாவிய தளமாக உயர்த்தியிருக்கிறார்,
'சென்டர் ஃபார் டீச்சர் அக்கரீடிடேஷன்' (சென்டா) என்ற நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரம்யா வெங்கடராமன். அவரிடம் பேசியதிலிருந்து:
