சோழவந்தானில் பலத்த மழையால் பெயா்ந்து விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு
சோழவந்தானில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் சனீஸ்வரன் கோயில் அருகே சாலையில் விழுந்த மரம்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பெயா்ந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சோழவந்தான், சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.




