என்எல்சி தொழிலாளி உயிரிழப்பு
என்எல்சி அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்து காயம் அடைந்த தொழிலாளி, புதுச்சேரி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், இளமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவா் முத்துகிருஷ்ணன்(37), என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
கடந்த மாதம் 24-ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது, கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனையில் சோ்த்தா். பின்னா், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

