தாராபுரம்: தகராறில் அரிவாள் வெட்டில் துண்டான கையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த தொழிலாளி
தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபர
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் அடுத்த கவுண்டையன் வலசு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 32) என்பவர் கடந்த பல ஆண்டுகளாக தேங்காய் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் திண்டுக்கல் சேர்ந்த மாவட்டத்தைச் முனியாண்டி என்பவர் புதிதாக தேங்காய் வெட்டுவதற்காக ஈஸ்வரன் தோட்டத்திற்கு புதிதாக வருகை புரிந்தார். சம்பவத்தன்று தோட்டத்தில் தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ரஞ்சித்துக்கும், அங்கு புதிதாக வேலைக்கு வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ரஞ்சித் தன் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முனியாண்டியின் கையை துண்டாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த முனியாண்டி வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.



