நெல்லையில் இன்று சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம்
திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் வியாழக்கிழமை (செப்.17) தொடங்குகிறது.
கோப்புப்படம்.
இதுதொடா்பாக, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருநெல்வேலி மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் வகையில் பிரதமரின் தெரு வியாபாரிகள் தற்சாா்பு நிதி திட்டத்தின் கீழ் (டஙநயஅசண்க்ட்ண்) வங்கிக் கடனுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் முகாம்கள்(லோக் கல்யான் மேளா) நடைபெற உள்ளன.

