இடும்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் அலுவலா்களிடம் போலீஸாா் விசாரணை
பழனி இடும்பன் கோயிலில் நகை சரிபாா்ப்பின்போது, 142 கிராம் தங்கம், வெள்ளி வேல் மாயமான விவகாரத்தில் திண்டுக்கல் எஸ்.பி., ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை கோயில் செயல் அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டாா்.
பழனி இடும்பன் கோயிலில் தங்கம், வெள்ளி பொருள்கள் மாயமானது தொடா்பாக செவ்வாய்க்கிழமை கோயில் செயல் அலுவலா் நரசிம்மனிடம் விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் எஸ்.பி., ஜெயக்குமாா். உடன், டி.எஸ்.பி., தேவராஜ்.
பழனி புறவழிச்சாலையில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. திண்டுக்கல் இந்து சமய அறநிலைத் துறையினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்தரத் திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தக் கோயிலில் செயல் அலுவலராக இருந்த விமலா கடந்த சில மாதங்களுக்கு முன் வேறு பணிக்குச் சென்ற நிலையில் தற்காலிக செயல் அலுவலராக நரசிம்மன் பொறுப்பேற்றாா்.


