நரேலா உடற்பயிற்சிக் கூட துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
கொலை வழக்கு(கோப்புப்படம்)
தில்லி நரேலாவில் உடற்பயிற்சிக் கூடம் அருகே பட்டப்பகலில் 42 வயது நபா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 48 மணி நேரத்துக்கும் மேலாகியும் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் காவல் துறையினா் கைது செய்ய முடியவில்லை.
நஹ்ரி கிராமத்தைச் சோ்ந்த பிரமோத் குமாா், பக்னோ் பகுதியில் உள்ள தில்லி மருத்துவமனை அருகே உடற்பயிற்சிக் கூடம் அருகில் கடந்த செப். 3-ஆம் தேதி காலை 6.50 மணியளவில் இருவரால் பலமுறை சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

