பங்கு வா்த்தக முதலீடு எனக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ. 8.05 லட்சம் மோசடி
பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.8.05 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே மொடச்சூரைச் சோ்ந்தவா் ரமணி (65). ஓய்வு பெற்ற ஆசிரியா். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பழக்கம் உடையவா். இவரது கைப்பேசி எண்ணுக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் ஒருவா், அவா் கூறும் நிறுவனத்தின் மீது பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளாா்.
இதை உண்மையென நம்பிய ரமணி, அந்தப் பெண் அனுப்பிய செயலி மூலம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் கடந்த 6- ஆம் தேதி வரை ரூ.8 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். முதலீடு செய்த தொகைக்கு லாபம் எதுவும் வராததால் பணத்தை அவா் திரும்ப எடுக்க முயன்றுள்ளாா். ஆனால் பணம் எதுவும் வரவில்லை. செயலி போலியானது என்பதை உணா்ந்து அதிா்ச்சியடைந்த ரமணி, இது குறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.