Arts, culture, entertainment and media
ஜாமீனில் வந்து கெத்து காட்டிய குற்றவாளி; அதிரடி நடவடிக்கையில் இறங்கிய நீதிமன்றம்

அரியானா மாநிலம், சர்கி தாத்ரி மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிலத் தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமான வழக்கில் விஷால் என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட விஷால் ஜாமீன் வேண்டி உயர் நீதிமன்றத்தில் பலமுறை மனுத்தாக்கல் செய்தார்.
விஷாலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 4 முறை நிராகரித்தது. இருப்பினும், முக்கிய சாட்சிகளின் விசாரணை முடிந்ததையும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக விஷால் சிறையில் இருந்ததையும் கருத்தில் கொண்டு 5-வது முறையாகத் தாக்கல் செய்யப்பட மனுவின் போது நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி விஷாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த ஊரில் வெற்றி ஊர்வலம் நடத்தியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளை இவர் மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஜாமீனில் வெளியே வந்ததைக் கொண்டாடி வெற்றி ஊர்வலம் நடத்துவது சரியல்ல” என்று கண்டித்தது.
மேலும், விஷாலுக்கு எதிராகப் பிணையில் வெளியில் வராதபடியான கைது வாரண்டை நிறைவேற்றி, அவரை கைது செய்து செப்டம்பர் 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சர்கி தாத்ரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)