சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் திருவேங்கட விண்ணகரப் பெருமாளுக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் திருவேங்கட விண்ணகரப் பெருமாளுக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில் சித்திரை, ஆவணி, மார்கழி மாதங்களில் தலா 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில், ஆவணி திருவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
திருவிழாவின் தொடக்கமாக, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, திருவேங்கட விண்ணகரப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
