Science and technology
இனி PIN எண் தேவையில்லை.. AI தொழில்நுட்பம் மூலம் UPI பரிவர்த்தனை செய்ய புதிய திட்டம்!

நடைமுறைக்கு வரும் முன் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பின்னணி வேலைகளை NPCI தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புரட்சியை ஏற்படுத்திய UPI (Unified Payments Interface) அமைப்பில், அடுத்த கட்டமாக செயற்கை நுண்ணறிவு (AI Agents) மூலம் நேரடியாகப் பணப்பரிமாற்றம் செய்யும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவர NPCI திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு சிறிய பரிவர்த்தனைக்கும் PIN உள்ளிட வேண்டிய அவசியமின்றி, AI ஏஜென்ட்களே உங்களுக்காகப் பணப்பரிவர்த்தனைகளைச் செய்து முடிக்கும்.
