வாகனங்கள் மீது திடீர் கல்வீச்சு இளைஞரை மடக்கி பிடித்த மக்கள்
மதுராந்தகம், செப். 11–- மதுராந்தகம் அருகே படாளம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது
மதுராந்தகம் அருகே படாளம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது கல்வீசிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் அடுத்த படாளத்தில், சென்னை – -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.இதனால், இப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன.
இந்நிலையில், இந்த இணைப்பு சாலை பகுதியில், இளைஞர் ஒருவர், திடீரென, திருச்சி மார்க்கமாக சாலையில் சென்ற வாகனங்களின் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டார்.
இதில், தனியார் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்செல்லும் பேருந்து ஒன்றின் முகப்பு கண்ணாடி சேதமடைந்தது.
இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து நையப்புடைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், இளைஞரை மீட்டு, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா, எந்த ஊரைச் சேர்ந்தவர், என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.