Politics
தர்மத்தின் வழியில் அன்பும் அறமும் தழைத்தோங்கட்டும்; கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை: தர்மத்தின் வழியில் அன்பும் அறமும் தழைத்தோங்கட்டும் என முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு: அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும்.
தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
பிரத்யேக வீடியோ!
அநீதிக்கு எதிராக அறம் வெல்லும்; கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தில் முதல்வர் விஜய் சொன்ன முக்கிய செய்தி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

