உதவி மின்பொறியாளர் அலுவலகம் அமைச்சருக்கு விவசாயிகள் கடிதம்
திருப்பூர்:மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி, தமிழக மின்சாரத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்:
ஆண்டிபாளையம் மற்றும் சின்னியகவுண்டன் புதுார் துணை மின்நிலையங்கள், தலா 33/11 கே.வி. திறன் கொண்டவை. இடுவம்பாளையம் உதவி பொறியாளர் ஒருவரே இரண்டு துணை மின்நிலையங்களை கவனித்துவருகிறார். இதனால் அவருக்கு வேலைப்பளு ஏற்படுகிறது. மின் நுகர்வோரின் பணிகள் தேக்கமடைந்து, காலதாமதம் ஏற்படுகிறது.
இடுவம்பாளையம் உதவி பொறியாளர் அலுவலகத்திலிருந்து சின்னியகவுண்டன் புதுார் துணை மின்நிலையத்தை பிரித்து, சின்னிய கவுண்டன் புதுாரில் புதிய உதவி பொறியாளர் அலுவலகம் அமைக்கவேண்டும். சின்னிய கவுண்டன் புதுாரில் இதற்கு போதுமான இடம் உள்ளது. அல்லாதபட்சத்தில், மற்றொரு வழிமுறையையும் மேற்கொள்ளலாம். பெரியாண்டிபாளையத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சின்னிய கவுண்டம்புதுார், சின்னாண்டிபாளையம், குள்ளே கவுண்டன்புதுார் உள்ளிட்ட பகுதிகளை, பெரியாண்டிபாளையத்துடன் இணைக்கவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.