Politics
“திமுக தயவால் வென்றவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும்..” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!
திமுக தயவால் வெற்றி பெற்ற தவெக கூட்டணி கட்சிகள் அடக்கி வாசிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தயவால் வெற்றி பெற்று, தவெக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடக்கி வாசிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். கூட்டணியில் இருந்துகொண்டே இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுவது ஒரு குழப்பமான நிலைப்பாடு. ஆனால், இதில் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
"காங்., விசிக, ஐ.யு.எம்.எல் வீர வசனம் பேசுவதில் அர்த்தமே இல்லை; அடக்கி வாசிங்க”
ஆனால் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. விஜய்க்கு தான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று தவெகவினர் மட்டும்தான் சொல்லலாம். சொல்ல முடியும். காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் எல்லாம் திமுக கூட்டணியில் போட்டியிட்டு திமுகவின் தயவால்தான் வெற்றி பெற்றார்கள். இப்போது தவெக பக்கம் வந்துவிட்டார்கள். அதன்பிறகு வீரவசனம் பேசுவது எல்லாம் அர்த்தமில்லை. அடக்கி வாசியுங்கள்" என்றார்.
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை(18.09.2026) மின்தடை அறிவிப்பு
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





