Education
யு.பி.எஸ்.சி. தேர்வர் உதவித்தொகை தகுதித்தேர்வு எழுதிய மாணவர்கள்
திருப்பூர், செப். 7– யு.பி.எஸ்.சி., குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, தமிழக அரசு மாதம் 7,500
யு.பி.எஸ்.சி., குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, தமிழக அரசு மாதம் 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. தகுதித் தேர்வு மூலம் இதற்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், முதல்நிலை தேர்வுக்கு தயாராவோருக்கான தகுதித் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 114 மையங்களில் நடந்தது. திருப்பூரில் ஜெய்வாபாய் மற்றும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடந்த தேர்வில், பதிவு செய்த 462 பேரில் 358 பேர் பங்கேற்றனர்; 104 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
பழனியம்மாள் பள்ளியில் தேர்வு எழுதியோர்.