ஆவடியில் நான்கு நாட்களாக பகலில் ஒளிரும் மின் விளக்குகள்
ஆவடி, செப். 15– ஆவடி புதிய ராணுவ சாலையில், தொடர்ந்து நான்கு நாட்களாக எரியும் மின் விளக்குகளால்
ஆவடி புதிய ராணுவ சாலையில், தொடர்ந்து நான்கு நாட்களாக எரியும் மின் விளக்குகளால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆவடி புதிய ராணுவ சாலை, ஆவடி மாநகராட்சி அலுவலகம் முதல் ஆவடி செக் போஸ்ட் வரை, 20க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உள்ளன. இந்த மின் விளக்குகள், போதிய பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான நேரத்தில் இருள் சூழ்ந்து இருக்கும்.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக ஒரு கி.மீ., வரையுள்ள மின் விளக்குகள் பகல், நேரங்களிலும் எரிகிறது.
இதனால், ஆவடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.