Arts, culture, entertainment and media
துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
குன்றத்துார்:'துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா அறிவுறுத்தினர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்றத்துார் அருகே படப்பை அடுத்த கரசங்காலில் அடையாறு கால்வாயுடன் ஒரத்துார் கிளை கால்வாய் இணைக்கும் வகையில், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருமூடு கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
மேலும், வரதராஜபுரம், குன்றத்துார் பகுதியில் அடையாறு கால்வாய் துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா ஆய்வு செய்தார். அப்போது, நீர்வளத்துறை அலுவலர்கள், பணிகள் குறித்து விளக்கினர்.
அனைத்து பணிகளையும் பருவமழை தொடங்கும் முன் விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் சினேகா அறிவுறுத்தினார்.