திருச்செங்கோடு நகராட்சி குடிநீர் திட்டத்தை மேம்படுத்த ரூ.69.71 கோடி ஒதுக்கீடு
திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சி குடிநீர் திட்டத்தை மேம்படுத்த, 69.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நகராட்சி குடிநீர் திட்டத்தை மேம்படுத்த, 69.71 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்பட்டுள்ளது,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
அடுத்துள்ள மோளியப்பள்ளியில், 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை
சீரமைக்கும் பணியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பூமி
பூஜை செய்து துவக்கி வைத்தார்.
100 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரியை சீரமைப்பதன் மூலம், நிலத்தடி நீரை
சேமிக்க முடியும். 110 விதியின் கீழ் குடிநீர் மேம்பாட்டுக்காக மதுரை,
கடலுார் மாநகராட்சி, 93 நகராட்சி, 20 பேரூராட்சிகளில் பணிகளை
தொடங்க, 1,000 கோடி மதிப்பீட்டில் முதல்வர் திட்டங்களை அறிவித்தார்.
நகராட்சி குடிநீர் திட்டத்தை மேம்படுத்த குழாய்களை சீரமைக்க, 69.71
கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்ணி நடக்கவுள்ளது. திருச்செங்கோடு ரிங்
ரோடு, தோக்கவாடி முதல் பாலமேடு வரை மூன்றாம் கட்டப் பணி தொடங்க
உள்ளது. இதேபோல் அரியலுாரில் இருந்து சேலம் நான்கு வழி சாலை விரிவான
திட்ட மதிப்பீடு உருவாக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு முதல்
குமாரபாளையம் வரை மேம்பாலம் அமைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள்
உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளை சீரமைக்க, 66 கோடி மதிப்பில்
கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
சார்பில் நடத்தப்படும் கலை அறிவியல் கல்லுாரிக்கு, 15 கோடி ரூபாய்
மதிப்பில் கட்டடம் கட்டப்படும். மலை கோவிலுக்கு சென்று வர மாற்று பாதை
மற்றும் ரோப் கார் வசதியும், மலைமேல் பார்க்கிங் வசதியும்
மேம்படுத்தப்படும். தமிழகத்தில், 11 மருத்துவக் கல்லுாரிகள்
தொடங்கப்பட்டும் சிறப்பு மருத்துவர் இல்லை. எனவே, 284 உயர் சிறப்பு
மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 2,500 செவிலியர் கூடுதல்
பணியிடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். இது மட்டுமின்றி
பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது.
ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் நிதி வழங்கப்பட உள்ளது.
விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் த.வெ.க.,
நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு கூறினார்.