Crime, law and justice
Marie Wilson | புதுச்சேரி நீதிமன்றத்தில் மரிய வில்சன் ஆஜர்: விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Marie Wilson | சகோதரரைத் தாக்கிய வழக்கில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மரிய வில்சன் இன்று நேரில் ஆஜரானார்.
சகோதரரை தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழ்நாடு அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜரான நிலையில், விசாரணை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரியில் சகோதரர் மரிய குளோத்தின் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குற்றப்பத்திரிகையைப் பெற மரியவில்சன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அமைச்சர் மரியவில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இதனிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி லட்சுமிநாராயணன், நீதிமன்றத்திற்கு வர முடியாது எனக் கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என்றும் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜரானார் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, தனது மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
இந்த நிலையில், சகோதரரைத் தாக்கிய வழக்கில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மரிய வில்சன் நேரில் ஆஜரானார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
