Politics
மகளிருக்கு வெள்ளி ஜரிகை புடவை பொங்கலுக்கு வழங்கப்படும்; அமைச்சர் தகவல்

காட்பாடி: ''பொங்கல் பண்டிகைக்கு வழங்கக, மகளிரை கவரும் வகையில் பிரத்யேக வெள்ளி ஜரிகை புடவைகள் தயாரிக்கப்படுகின்றன,'' என, தமிழக கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
வேலுார் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, காட்பாடியில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் துவக்கி வைத்தார். அவர் அளித்த பேட்டி:
பொங்கல் பண்டிகைக்கு வழங்க, ஒரு கோடியே, 77 லட்சம் வேட்டி, சேலைகளை தயாரிக்குமாறு, வருவாய் துறையிலிருந்து கேட்டுக் கொண்டனர். வெள்ளி ஜரிகை வைத்து சேலை தயாரித்துள்ளோம். மகளிர் விரும்பும் வகையில் இது இருக்கும்
சர்க்காரியா கமிஷன் தொடர்பாக அமைச்சர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என, கம்யூனிஸ்ட் தலைவர் கூறியுள்ளதாக கேட்கிறீர்கள். என் துறையை பற்றி கேளுங்கள்; நான் பதில் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
