Science and technology
புதனை நெருங்கும் விண்கலம்

சூரியனுக்கு அருகில் உள்ள புதன் கோளை ஆய்வு செய்ய ஐரோப்பிய, ஜப்பான் விண்வெளி மையம் இணைந்து 2018 அக். 20ல் இரண்டு விண்கலங்களை அனுப்பியது. பூமி, வெள்ளி மற்றும் புதனின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி பல கோடிக்கணக்கான கி.மீ., பயணித்தது. எட்டு ஆண்டுகளுக்குப்பின் தற்போது புதனை நெருங்கியுள்ளது.
இதன்படி 2026 நவ. 21ல் புதனின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைய உள்ளது. 2026 டிசம்பரில், இரண்டும் தனியாக பிரிந்து புதன் கோளை ஆய்வு செய்ய தொடங்கும். பூமியில் இருந்து 7.7 கோடி கி.மீ., துாரத்தில் புதன் உள்ளது.