Politics
வரும் 16ல் தே.மு.தி.க., மா.செ., கூட்டம்

சென்னை: தே.மு.தி.க., கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கை: தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், வரும் 16ம் தேதி காலை, சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.
கட்சியின் 22ம் ஆண்டு தொடக்க நாள் மற்றும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்து, முக்கிய ஆலோசனை நடைபெறும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.