ஒளிராத உயர் மின் கோபுர விளக்கு ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
உடுமலை: உடுமலை சின்னவீரம்பட்டியில் உயர் மின் கோபுர விளக்கு ஒளிராததால், விபத்துக்கள் ஏற்படுகிறது.
உடுமலை தாராபுரம் ரோட்டில், சின்ன வீரம்பட்டி மற்றும் மைவாடி செல்லும் ரோடு என நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
கோவில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருந்த நிலையில். கடந்த இரு மாதமாக உயர்மின் கோபுர விளக்கு எரியாமல், இருட்டாக உள்ளது.
நான்கு ரோடு மற்றும் கிராமத்திற்கு செல்லும் பிரதான வழித்தடத்தில் மின் விளக்குகள் எரியாததால், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். எனவே, இதனை சரி செய்ய, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.