Politics
ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது: உதயநிதி விமர்சனம்!
ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்
ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப். 15) விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதவது:
”ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2 ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த டம்மி அரசு உருவாக்கி இருக்கிறது.
மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது.
ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, மத்திய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
à®à®¯à¯à®µà¯à®ªà¯à®±à¯à®± நà¯à®¤à®¿à®¯à®°à®à®°à¯ à®à¯à®°à®¿à®¯à®©à¯ à®à¯à®à®ªà¯ தலà¯à®®à¯à®¯à®¿à®²à¯ à®à®©à¯à®±à®¿à®¯ â மாநில à®à®°à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®à¯à®¯à¯à®¯à®¾à®© à®à®±à®µà¯à®à®³à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®à®°à®¾à®¯à¯à®µà®¤à®±à¯à®à®¾à® நம௠தலà¯à®µà®°à¯ @mkstalin à®à®µà®°à¯à®à®³à¯ தலà¯à®®à¯à®¯à®¿à®²à®¾à®© à®à®°à®à®¾à®²à¯ à®à®®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à® à®à®¯à®°à¯à®¨à®¿à®²à¯à®à¯à®à¯à®´à¯à®µà¯ à®®à¯à®à®à¯à®à¯à®®à¯ வà¯à®²à¯à®à®³à®¿à®²à¯ à®à®³à¯à®à¯à®à®à¯à®à®¿ à®à®±à®à¯à®à®¿ à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ à®à®£à¯à®à®¿à®à¯à®à®¤à¯à®¤à®à¯à®à®¤à¯.
Leader of the Opposition Udhayanidhi Stalin stated on Tuesday (Sept. 15) that state autonomy cannot be upheld merely by posting Reels.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.