சித்த மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது..

சென்னை திருவொற்றியூரில் சித்த மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
அகஸ்தீஸ்வரர் பஞ்சகர்மா மருத்துவம் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்த சஜிகுமார் என்ற அந்த நபர் குறித்து ஊரக நலப்பணித்துறை மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை புகார்கள் சென்றதையடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.