பூரி ஜெகநாதர் சுவாமி சிலையுடன் ஊர்வலம் ராதை, கிருஷ்ணர் வேடத்தில் குழந்தைகள்

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் துவக்க தின விழா மற்றும் 13ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. ஓசூர் ஜி.ஆர்.டி., அருகே பூ மார்க்கெட்டை ஒட்டியுள்ள காலி இடத்தில், பூரி ஜெகநாதரில் உள்ளது போன்ற கிருஷ்ணன் மற்றும் பலராமன், சுபத்ரா தேவி ஆகியோரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்-பட்டு, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ராதை, கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளுடன், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கிருஷ்ணன், பல-ராமன், சுபத்ரா தேவி உருவ சிலையுடன், ஓசூர் ஜி.ஆர்.டி., அருகே இருந்து நேற்று காலை ஊர்-வலம் புறப்பட்டது. அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் கிருஷ்ணன் முன்-னிலை வகித்தார். சேவா பாரதி மாவட்ட தலைவர் டாக்டர் சண்முகவேல், ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.ஓசூர் தாலுகா அலுவலக சாலை, நேதாஜி, ரோடு, எம்.ஜி., ரோடு வழியாக சென்ற ஊர்வலம் சென்றது. அகில உலக அமைப்பு பொதுச்செய-லாளர் மிலிந்த் ஸ்ரீகாந்த் பராண்டே, மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் கிரண்குமார், அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக மாநில இணை செய-லாளர் விஷ்ணுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.