Politics
கார்ப்பரேஷன் வேலை என்றாலே இப்படித்தானோ! ஒன்னுக்கு மூணு தடவை செய்வாங்க போலிருக்கே

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் சூயஸ் நிறுவனத்தினர், பிரதான ரோடுகளில் குழாய் பதிக்க அனுமதி தரப்பட்டது. விடுபட்ட இடங்களில் குழாய் பதித்து வருகின்றனர். ஆக. 30க்குள் முடித்து விடுவோம்; அதுவரை சிரமத்தை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென கமிஷனர் ரவி தேஜா கூறியிருந்தார்.
அவிநாசி ரோட்டில் அண்ணாதுரை சிலை அருகில் பெட்ரோல் பங்க் எதிரே குழி தோண்டியபோது, பாதாள சாக்கடை குழாயை சேதப்படுத்தினர். ஏற்கனவே பதித்திருந்த குடிநீர் குழாயையும் உடைத்து விட்டனர்.
கழிவு நீர் கசிந்து குழியில் தேங்கியது. ஆபத்தான சூழல் இருப்பது குறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்ட பின் சரி செய்யப்பட்டது.
மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர், வீதி வீதியாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். டெங்கு கொசு உற்பத்தி செய்யும் வகையில் தண்ணீரை தேக்கி இருந்தால் அபராதம் விதிக்கின்றனர். இப்போது யாருக்கு அபராதம் விதிக்கப்போகிறார்கள்?