Politics
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: உதயநிதி
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறித்து...
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப். 8) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், மீண்டும் கோச்சிங் சென்டரில் இணைந்து நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் சாய் அபினவ், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டு நிற்கும் மாணவர் சாய் அபினவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது???
குளறுபடிகளும் - மோசடிகளும் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்காக கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களை, இன்றைய ஆட்சியாளர்கள் இன்னும் வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நà¯à®à¯ தà¯à®°à¯à®µà®¿à®©à¯ à®à®à¯à®à®®à¯ à®à®¾à®°à®£à®®à®¾à® பலà¯à®²à®¾à®µà®°à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤ à®à®¾à®¯à¯ à®à®ªà®¿à®©à®µà¯ à®à®©à¯à®à®¿à®± மாணவர௠தறà¯à®à¯à®²à¯ à®à¯à®¯à¯à®¤à¯à®à¯à®£à¯à® à®à¯à®¯à¯à®¤à®¿ à®à®±à®¿à®¨à¯à®¤à¯ à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®¯à¯à®±à¯à®±à¯à®©à¯.
à®à®±à¯à®à¯à®©à®µà¯ à®à®°à®£à¯à®à¯ à®®à¯à®±à¯ நà¯à®à¯ தà¯à®°à¯à®µà¯ à®à®´à¯à®¤à®¿ à®à®°à¯à®¨à¯à®¤ நிலà¯à®¯à®¿à®²à¯, à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à¯à®à¯à®à®¿à®à¯ à®à¯à®©à¯à®à®°à®¿à®²à¯ à®à®£à¯à®¨à¯à®¤à¯ நà¯à®à¯ தà¯à®°à¯à®µà¯à®à¯à®à¯à®¤à¯ தயாராà®à®¿ வநà¯à®¤ மாணவர௠à®à®¾à®¯à¯ à®à®ªà®¿à®©à®µà¯, à®à®¨à¯à®¤â¦
Leader of the Opposition Udhayanidhi Stalin stated on Tuesday (Sept. 8) that pressure must be exerted on the Central Government to cancel the NEET exam.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

