Lifestyle and human interest
விநாயகர் சிலை வைப்பதில் தகராறு மாஜி ஊராட்சி துணைத்தலைவர் கொலை

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் சின்னலுப்பை ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் பொம்மன் விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
குஜிலியம்பாறை ஒன்றியம் சின்னலுப்பை ஊராட்சி பொம்மாநாயக்கன்பட்டி பொம்மன் 55. இவர் 2020- - 2025-ல் சின்னலுப்பை ஊராட்சியின் துணைத் தலைவராக இருந்தார். பொம்மாநாயக்கன்பட்டியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுவாமி கும்பிடுவதில் பிரச்னை இருந்து வரு கி றது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வணங்க ஏற்பாடுகள் செய்தனர். அச்சிலை வைக்க பொம்மன் எதிர்ப்பு தெ ரிவித்தார்.
வெட்டிக்கொலை இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொம்மன், கரூர் மாவட்டத்தில் உள்ள தனது பூர்வீக ஊரான வெள்ளியணை மூக்கணாங்குறிச்சி நோக்கி டூவீலரில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த பொம்மா நாயக்கன்பட் டியை சேர்ந்த ஏழு பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்தது. போலீசாரால் மீட்கப்பட்ட உடல், கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின் சொந்த ஊரான பொம்மா நாயக்கன்பட்டிக்கு நேற்று மாலை கொண்டு வந்தனர்.
பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் ஏ.டி.எஸ்.பி., தெய்வம், டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் ராஜா ,போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டுள்ளனர்.