Economy, business and finance
வங்கி ஊழியர்கள் இன்று முதல் ‘ஸ்டிரைக்’
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில், 350 வங்கி கிளைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனால், வங்கி பணிகள் முடங்குகின்றன.
வாரம் 5 நாட்கள் வங்கி வேலை முறையை அமல்படுத்த வேண்டும், பி.எல்.ஐ. திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் உட்பட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு (யு.எப்.பி.ஏ.) சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, நாளை 2-வது சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.