மானாமதுரை,இளையான்குடிக்கு தண்ணீர் தேடி வரும் விலங்குகள்
மானாமதுரை, செப்.17- மானாமதுரை,இளையான்குடி பகுதியில் தொடர்ந்து அதிகரிக்கும் வெயிலால் வனப்பகுதி வறண்டு
மானாமதுரை,இளையான்குடி பகுதியில் தொடர்ந்து அதிகரிக்கும் வெயிலால் வனப்பகுதி வறண்டு காணப்படுவதால் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
மானாமதுரை, இளையான்குடியில் கடந்த சில வாரங்களாக கோடை முடிந்தும் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.வனப்பகுதிகளிலும் போதிய மழை இல்லாத காரணத்தினால் நீர் நிலை வறண்டு தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகளும் அவ்வப்போது ஊருக்குள் தண்ணீர் தேடி வருகின்ற நிலையில் வாகனங்களில் அடிபட்டு பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.