Economy, business and finance
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் 2வது ஷோரூம் மதுரை அண்ணா நகரில் துவக்கம்
மதுரை: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மதுரையில் தனது இரண்டாவது ஷோரூமை அண்ணாநகரில் தொடங்கியுள்ளது. இது அந்த நிறுவனத்தின் 68-வது ஷோரூமாகும்.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பாரம்பரியத்தை உருவாக்கி வரும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மதுரை அண்ணா நகரில் 80 அடி சாலையில் தனது 68-வது ஷோரூமைத் திறந்தது. இதன் மூலம் நகரின் மற்றொரு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் ஜூவல்லரி சேவைகள் மேலும் எளிதாகக் கிடைக்கும்.
புதிய ஷோரூம் தொடக்கத்தை முன்னிட்டு, கிராமிற்கு ரூ.250 குறைவு, பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகள் வாங்கும்போது கிராமிற்கு கூடுதலாக ரூ.150 பெறலாம். வைரம், அன்கட் வைரத்தின் மதிப்பில் 12.5 சதவீதம் சலுகையும், வெள்ளிப் பொருட்களுக்கான சேதாரத்தில் 25 சதவீத சலுகையும், வெள்ளி நகை விலையில் 10 சதவீத சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், ஜூவல்லரி பர்சேஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இணையும் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு வெகுமதிகளைப் பெறலாம். இந்தச் சலுகைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஷோரூமில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் கூறியதாவது: மதுரை தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட நகரம். அதன் பாரம்பரியம், கோயில்கள், மல்லிகைப்பூ, துடிப்பான வாழ்க்கைக்கு புகழ்பெற்றது.
இந்த நகரில் எங்களது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது சிறப்பானது. இங்குள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்ற வரவேற்பும் நம்பிக்கையும், நகரின் மற்றொரு பகுதியில் இரண்டாவது ஷோரூமை அமைக்க எங்களை ஊக்குவித்தது.
புதிய ஷோரூம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மதுரையுடனான எங்களது உறவில் மற்றுமொரு அத்தியாயத்தையும் சேர்க்கிறது” என்றார்.
நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
“எங்களது 68-வது ஷோரூமைத் திறப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் தருணமாகும். ஒவ்வொரு புதிய ஷோரூமும், பல ஆண்டுகளாக எங்களது வாடிக்கையாளர்களுடன் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. எங்களது ஜூவல்லரி தொகுப்புகளையும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளையும் நகரில் இன்னும் அதிகமான மக்களுக்கு அருகில் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

