Crime, law and justice
டிரம்ப் அரசின் விசா கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்தது அமெரிக்க கோர்ட்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் விசாவுக்கு நான்கு ஆண்டு கால வரம்பு நிர்ணயித்த, அதிபர் டொனால்டு டிரம்ப் அரசின் உத்தரவுக்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் தங்கி படிப்பதற்கு வழங்கப்படும் எப் - -1 விசாக்களுக்கான அதிகபட்ச காலவரம்பை, 4 ஆண்டுகளாகவும், பத்திரிகையாளர்களின் விசாவை 240 நாட்களாகவும் குறைத்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஜூலையில் புதிய சட்டத்தை கொண்டுவந்தது.
அதற்கு முன், தங்களின் படிப்பு முடியும் வரை மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், இந்த புதிய விசா நடைமுறை மாணவர்களின் கல்வியை பெருமளவு பாதிக்கும் என்று கூறி 500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலாக இருந்த நிலையில், மாசாசூசெட்ஸ் நீதிமன்றம், இந்த கொள்கை அமெரிக்க பொருளாதாரத்திற்கும் உயர்கல்வி அமைப்புக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறி தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
