Crime, law and justice
செப்.25ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; மதுரையில் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப்.25ம் தேதி மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கும் திட்டமான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்.15ல் தொடங்கி வைப்பதாக இருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.755.83 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் முதல்வர் விஜய் லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் தொடங்கப்படுவது தள்ளி போனது. எப்போது திட்டத்தை தொடங்குவது என்ற அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந் நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப். 25ம் தேதி மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதே போன்று செப்.22ம் தேதி காமராஜர் காலை உணவு திட்டத்தை முதல்வர் விஜய் திருவான்மியூரில் தொடங்கி வைக்க உள்ளார்.
அதே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வராது.