திருச்செந்தூர் முருகன் கோவிலில் மூத்த குடிமக்கள் தரிசன வரிசையில் முறைகேடு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில், மூத்த குடிமக்கள் செல்லும் சிறப்பு வழியில், சில நாள்களுக்கு வயது குறைந்த நபர்களை கோவில் அர்ச்சகர்கள் அழைத்துச் செல்வதை செந்தில்குமார் என்பவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இந்த நிலையில், கோவில் வளாகத்தில் நின்றிருந்த செந்தில்குமாரிடம் வீடியோ வெளியிட்டது தொடர்பாக குமார் மற்றும் சண்முகம் ஆகிய அர்ச்சகர்கள் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கைகலப்பிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அர்ச்சகர்கள் மற்றும் செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.