Lifestyle and human interest
செய்தி மட்டும் சேதமடைந்த குடீநீர் தொட்டி மாற்றி அமைக்க கோரிக்கை
கூவத்துார், செப். 10– கானாத்துாரில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள்
கானாத்துாரில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கூவத்துார் அருகே கானாத்துார் ஊராட்சியில், 400 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக, 2008ம் ஆண்டு,
பிள்ளையார் குளம் மற்றும் கங்கை அம்மன் கோவில் அருகே அருகில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின்மோட்டார் வசதியுடன் இரண்டு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. தற்போது இந்த இரு குடிநீர் தொட்டிகளும் சேதமடைந்ததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கானாத்துாரில் இருந்து 2 கி.மீ., துாரம் சென்று சிவன் கோவில் தெருவில் குடிநீர் எடுத்து வரும் அவலம் நீடிக்கிறது.
இதற்கிடையில், ஊராட்சி சார்பில், கிணற்றின் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், கோடை காலங்களில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் திணறுகின்றனர். எனவே, சேதமடை ந்த இரண்டு குடிநீர் தொட்டிகளை மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.