Economy, business and finance
அக்.,26 முதல் வங்கி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தேசிய துணைப் பொதுச்செயலாளர் தகவல்
திண்டுக்கல், செப்.12 - ‘‘பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விட்டால் அக்.,26
‘‘பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விட்டால் அக்.,26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட அகில இந்திய தலைமை ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது’’ என கனரா வங்கி அலுவலர்கள் சங்கங்களின் தேசிய துணைப் பொதுச்செயலாளர் காமாட்சிராஜா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்களின் வேலை நிறுத்தம் எதிரொலியாக நாடு முழுவதும் 141 கோடி வாடிக்கையாளர்களின் சேவைப் பணிகள் பாதிக்கப்பட்டு, பணிகள் முடங்கி உள்ளன.
மத்திய அரசும், அனைத்து இந்திய பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பும் இணைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இட்டனர். அதில் மாதத்தில் 4 சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். காலை 9:30 மணி முதல் மாலை 5:20 மணி வரை பணி நேரத்தை தினசரி நாட்களை கூடுதலாக பணியாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு கையெழுத்தானது.
அதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாததால் தற்போது வேலை நிறுத்தம் துவங்கியுள்ள நிலையில் நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் 141 கோடி வாடிக்கையாளர்கள் சேவை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தினால் அக்.,26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அகில இந்திய தலைமை ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது என்றார்.