சேலம் -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பால பணியால் வாகன நெரிசல்

தர்மபுரி: விநாயகர் சதுர்த்திக்கு சிலை ஏற்றி சொல்லும் வாகனங்கள் தர்ம-புரியில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றன. இதனால், தர்மபுரி மாவட்டம் பாளையம் சுங்கச்சா-வடி, தொப்பூர் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து ஏற்-பட்டது. மேலும், தொப்பூர் கணவாய் பகுதியில், உயர்மட்ட மேம்பால பணிகள் நடப்பதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று மாலை, சேலம் -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் முதல், சேலம் மாவட்டத்-திலுள்ள ஜோடுகுளி வரை, 5 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் தேங்கி நின்றன. வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் வாக-னத்தை ஓட்டிச்சென்றனர்.
வார இறுதி நாள் மற்றும் தொடர் விடுமுறை தினங்களில் போக்-குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு, வாகனங்களை சீரான இடை-வெளியில் கடந்து செல்ல, சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் சாலை பராமரிப்பு குழுவினர், உரிய நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.