மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப். 15 நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,599 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று(செப். 15) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,177 கன அடியிலிருந்து விநாடிக்கு 7,599 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.07 அடியிலிருந்து 87.82 அடியாக குறைந்துள்ளது.
நீர் இருப்பு 50.19 டிஎம்சியாக உள்ளது.
Water inflow into Mettur Dam has increased to 7,599 cubic feet per second.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
