சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலை மவுண்ட் லிட்ரா ஜீ மாணவர்கள் அசத்தல்
திருப்பூர்: மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்கள், களி மண்ணை பயன்படுத்தி, பூ விதைகள் அடங்கிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் தயாரித்தனர். பக்தியையும் இயற்கையையும் இணைக்கும் வகையில் சிலைகளை வடிவமைத்துள்ளனர். சிலைகளை மண்ணில் வைக்கும்போது, அதிலுள்ள விதைகள் முளைத்து, பூச்செடிகளாக வளரும்.
பசுமை முயற்சிக்கு ஆதரவாக, வனம் இந்தியா அறக்கட்டளை, பள்ளியுடன் இணைந்து மரக்கன்றுகளை வழங்கியது. இதன்வாயிலாக, மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று, மலைக்கோவில், குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.