வரதட்சணை கேட்டதால் பெண் தற்கொலை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதால் மனமுடைந்த பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் மனைவி அமுதா,19; இருவருக்கும் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி திருமணம் நடந்த நிலையில் 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவர் கோகுல், மாமனா் ஏழுமலை, மாமியார் சோலையம்மாள் ஆகிய மூவரும் அமுதாவிடம் வரதட்சணை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அமுதா நேற்று முன்தினம் காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.