Politics
“கட்சிகளை உடைக்கும் பாஜக… 2029ல் மக்கள் நல்ல தீர்ப்பைத் தருவார்கள்” – மாணிக்கம் தாகூர்

பாஜக பல கட்சிகளை உடைப்பதாகவும், இதனை எல்லாம் பார்த்து, மக்கள் வரும் 2029 தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் எனவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “2029 தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மாணிக்கம் தாகூர் கூறியதாவது; “சமூக நீதியை முக்கியமாக வைத்துள்ள மதச்சார்பற்ற இந்தக் கூட்டணியைப் பிரிப்பதற்காக சிலர் நரித்தனம் செய்கிறார்கள். அமைச்சர் கீர்த்தனா என்ன பேசினார் எனத் தெரியவில்லை. அவர் பேசியதைப் பார்த்த பிறகு கருத்து தெரிவிக்கிறேன்.
மோடி அரசுக்கு கடந்த தேர்தலில் 303 சீட் பெற்றிருந்தது. ஆனால், தற்போது பாஜகவுக்கு 239 சீட்களாகக் குறைந்துள்ளது. இருந்தபோதிலும், பாஜக ஆட்சி அமைத்தது. அப்படி ஆட்சி அமைந்த பிறகும்கூட மோடியும், அமித்ஷாவும் பல கட்சிகளையும் உடைத்து வருகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இதனை எல்லாம் மக்கள் பார்க்கட்டும் என்கிறார். மேலும், மக்கள் கைகளில் இதனைக் கொடுத்துவிடுவோம், மக்கள் 2029ஆம் ஆண்டு தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
