Politics
இன்றைய செய்திகள் செப். 10 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
மு.க. ஸ்டாலின் | வி.எஸ். பாபு - கோப்புப் படம்
வழக்கு தள்ளுபடி!
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அளிக்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக துணைப் பொதுச் செயலாளர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுவார்கள் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு ஆதரவு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி!
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
’டம்மி சிஎம்’
சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்று திரும்பிவர ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் முடிந்தது.
மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியானதாகவும், 87 பேர் மாயமாகியுள்ளதாக கடலோரக் காவல் படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
வீட்ல என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.