Politics
தமிழ்நாடு பா.ஜ., ஏன் இன்னும் துாங்கிக் கொண்டிருக்கிறது?.. அந்துமணி பதில்கள்
@block_B@ஜி.சுப்பிரமணி, திண்டுக்கல்:நாகையில், 33,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவிருந்த, கச்சா

தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டங்களுக்கு, 'எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்; இது எங்கள் இடம்' என்றெல்லாம், மக்கள் முட்டுக்கட்டை போடாமல், அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பண்பட்ட அரசியல்வாதியாகவும், மனித நேயம் மிக்கவராகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார் கனிமொழி.
ஜெயகுமாரின் கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதா, தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி கட்டிய ஓமந்துாரர் மாளிகையை அரசு மருத்துவமனையாக மாற்றியதைப் போல, இப்போதும் நடக்கும் எனச் சொல்கிறார். பழைய அரசியலைக் குப்பையில் போட்டு, 'மைக்' ஜெயகுமார், புதிதாக சிந்திக்கவில்லை எனில், இவர் கதி அதோ கதியாகிவிடும் என்பதை, அறியாதவராக இருக்கிறாரே!
ஏ.ஐ., எதற்கு? நம் நாளிதழை தினமும் படித்தால் போதுமே வைத்தியநாதன்!
ஒருமுறை சிலர் கடுமையாக தண்டிக்கப்படட்டும், அதன்பின் பாருங்கள்... அனைவரும், 'கப்சிப்' ஆகிவிடுவர்.
தமிழக பா.ஜ.,வுக்கு சுறுசுறுப்பான தலைமை இன்னும் கிடைக்கவில்லை. வேகமாக, சாதுர்யமாக, மத்திய அரசு செய்யும் நலத் திட்டங்களை ஆணித் தரமாக, சாமானிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் திறன் தமிழக தலைவர்கள் யாரிடமும் இல்லை; வெள்ளை வேட்டி - சட்டை போட்டு அல்லது புடவையே கசங்காமல், அலுங்காமல், குலுங்காமல், போட்டோவுக்கு போஸ் கொடுத்து, பேட்டிகள் கொடுப் பதற்கு மட்டும் தான் இவர்களால் முடிகிறது.