பெண்ணை தாக்கிய 3 பேருக்கு காப்பு
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி, 35; சமையல் தொழிலாளி. இவர், வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பீஹாரை சேர்ந்த இளைஞர்கள் பிபின் சப்பல், 30, சுஜித், 26, மிதலேஷ் குமார், 25, ஆகிய மூவரும், கலைவாணியை வழிமறித்து, முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து கலைவாணி அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார், மூவரையும் கைது செய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.